பயணித்துக் கொண்டிருக்கும் ரயிலின் மலசல கூடத்திலிருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு தபால் ரயிலின் மலசல கூடத்திலேயே இறந்த நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமானது ரயில்வே பாதுகாப்பு பிரிவினரால் பண்டாரகம ரயில்வே நிலையத்தில் இன்று(23) காலை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுமார் 55 வயது மதிக்கத்தக்க குறித்த நபர் அடையாளம் காணப்படாதவிடத்து பிரேத பரிசோதனைகளுக்காக பண்டாரகம மாவட்ட மருத்துவமனையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிசார் தெரிவித்துள்ளனர்.
#rizma