ஓமானிலிருந்து 288 பேர் நாடு திரும்பினர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஓமானில் சிக்கியிருந்த 288 இலங்கையர்கள் இன்று(29) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை விமான சேவையின் விசேட விமானம் மூலம் இன்று(29) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவ்விமானப் பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததை தொடர்ந்து, பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஹொங்கொங் நாட்டில் சிக்கியிருந்த 26 இலங்கையர்கள் நேற்றிரவு(28) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.