ஓய்வு பெற்ற இராணுவத்தினர்கள், 100 பேருக்கு சமாதான நீதவான் பதவி…

ஓய்வு பெற்ற இராணுவத்தினர்களுள், தெரிவு செய்யப்பட்ட 100 பேருக்கு சமாதான நீதவான் பதவி வழங்கப்படவுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு கௌரவமளிக்கும் வகையிலும், பொதுமக்கள் சேவையில் அவர்களை மீண்டும் இணைத்துக் கொள்ளும் வகையிலும் இந்த சமாதான நீதவான் பதவி வழங்கப்படுவதாக நீதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கான நிகழ்வு நீதி அமைச்சில் நாளை(04) இடம்பெறவுள்ளது.

 

(rizmira)