ஓய்வு பெற்ற புகையிரத சாரதிகளுக்கு பணிக்கு வருமாறு அழைப்பு

ஓய்வு பெற்றுள்ள புகையிரத சாரதிகளுக்கு பணிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி நாளை காலை 6 மணிக்கு புகையிரத திணைக்களத்தின் தலைமையகத்திற்கு ஓய்வு பெற்ற சாரதிகள் வருகை தருமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புகையிரத சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் மேற்கொண்டுள்ள திடீர் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாகவே ஓய்வுபெற்ற சாரதிகளுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.