ஓரினச்சேர்க்கை திருமண சட்டத்தை ஏற்படுத்தும் யோசனையினை ஜனாதிபதி நிராகரிப்பு..

இலங்கையில் ஓரினச்சேர்க்கை திருமண சட்டத்தை ஏற்படுத்தும் யோசனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று(17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யப்பா அபேவர்தன இது தொடர்பாக குறிப்பிட்டார்.

GSP பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு பெற்றுக் கொள்வதற்கு முன்வைக்கப்பட்டுள்ள செயல் திட்டத்திலேயே ஓரினச்சேர்க்கை திருமண சட்டம் ஏற்படுத்துதல் தொடர்பான யோசனை குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த செயல் திட்டத்தில் காணப்படும் யோசனைகளில் நாட்டில் நடைமுறைப்படுத்த முடியாத யோசனைகளை தவிர்க்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யப்பா அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.