(FASTNEWS | COLOMBO) – பாதாள உலகக் குழுவின் தலைவர் மாகந்துரே மதூஷ் உடன் துபாயில் கைதாகி நேற்று(28) இந்நாட்டுக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் கஞ்சிபானி இம்ரான் நேற்று(28) கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
நேற்றைய விசாரணைகளில் கஞ்சிபானி இம்ரான் அவரது மனைவியினை கொலை செய்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிக்கும் போது கஞ்சிபானி இம்ரான் கண்ணீர் விட்டு அழுததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் வாக்குமூலம் அழிக்கும் அநேக சந்தர்ப்பங்களில் அவர் கண்ணீர்விட்டு அழுததாகவும் விசாரணை வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.