(FASTNEWS|COLOMBO) கடந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸ் மற்றும் முப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் சந்தேகத்தின் பேரில் 20 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் , பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
வெள்ளவத்தை , மாவனெல்லை , மற்றும் கொம்பனித் தெருவில் மூன்று பேர் வீதமும் மிரிஹான மற்றும் தெஹிவளையில் இரண்டு பேர் வீதமும் , கொள்ளுபிட்டி , பண்டாரவளை , காத்தான்குடி , அளுத்கம , புரவசம்குளம் பிரதேசங்களில் ஒருவர் வீதமும் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.