முகக்கவசமின்றி நடமாடிய 162 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று(01) காலை 5 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணியாது பொது இடங்களில் நடமாடிய 162 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், முகக்கவசம் அணியாது பொது இடங்களில் நடமாடுபவர்களை தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைய 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.