கடும் பனிமூட்டம் – விமானங்கள் மத்தலயில் தரையிறக்கம்

கட்டுநாயக்க விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் தற்போது கடும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், இன்று குறித்த விமான நிலையத்தில் தரையிறக்கப்படவிருந்த மூன்று விமானங்களை மத்தலை விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.