அவுஸ்திரேலியாவில் தென் கிழக்கு பகுதியில் நேற்று கடுமையான புழுதிப்புயல் வீசியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
500 கி.மீ. பரப்புக்கு இந்தப் புழுதிப்புயல் வீசியுள்ளதுடன், சிட்னி உள்ளிட்ட பல நகரங்கள் புழுதிப்புயலால் பாதிக்கப்பட்டன. காற்றின் தரம் மிகக்குறைவானதாக மாறியதால் பொது மக்கள் இடையே அச்சம் ஏற்பட்டது.
கடந்த ஆகஸ்டு மாதம் முதல், அந்த நாடு கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள நிலையில், இந்தப் புழுதிப்புயல் வீசியதால் சாலைப் போக்குவரத்து பாதித்தது. விமானப்போக்குவரத்தும் பாதித்ததாக தகவல்கள் கூறுகின்றன.