கடும் மழையினால் நீரில் மூழ்கிய நாவலப்பிட்டி

(FASTNEWS|COLOMBO) – இன்று(20) அதிகாலை முதல் பெய்து வரும் கடும் மழையினால் நாவலப்பிட்டி நகரம் நீரில் மூழ்கியது.

கடும் மழையினால் நாவலபிட்டி பேரூந்து தரிப்பிடத்திலிருந்து நாவலபிட்டி பொலிஸ் நிலையம் வரையில் கண்டி அட்டன் பிரதான வீதி நீரில் மூழ்கியதால் அவ் வீதியின் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மலையகத்தில் பெய்த கடும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.