(FASTNEWS|COLOMBO) கடந்த சில நாட்களாக கனடாவின் கிழக்கு பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளதையடுத்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒட்டாவா, பியூஸ், கியூபிக் நகரங்களில் வாழும் மக்கள் வெளியேற்றப்பட்டனர். சுமார் 1500 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
வெள்ளம் பாதித்த பகுதியில் இராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.