ஈரானில் பெய்த கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக 7 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈரான் நாட்டில் கடந்த 5ஆம் திகதி முதல் கடும் மழை பெய்து வருகிறது. மஜந்தரன், கிலான், கோலஸ்டான் மாகாணங்களில் பெய்த மழையினால் வெள்ளம ஏற்பட்டுள்ளதுடன் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 7 பேர் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் முழுவீச்சில் ஈடுபடுவதற்கு குழுக்களை ஈரான் மீட்பு மற்றும் நிவாரண அமைப்பு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.