கடுவெல – பியகமவை இணைக்கும் பிரதான பாலம் இன்று(25) காலை 08.00 வரை தற்காலிகமாக மூடப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த பாலத்தில் இடம்பெறுகின்ற திருத்த பணிகள் காரணமாக நேற்றிரவு(24) முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
நேற்றிரவு(24) 08 மணி முதல் இன்று காலை 06 மணி வரை குறித்த பாலம் மூடப்பட்டிருந்த நிலையில், திருத்த பணிகள் நிறைவுறாத காரணத்தினால் 08 மணி வரை பாலத்தை மூடுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது.