கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் விசேட சந்திப்பு இன்று..

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று(27) இடம்பெறவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம் எம் மொஹமட் தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்டத்தை மீறல் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் குறித்த கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.

மேலும், நாளை(28) அனைத்து மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளதாகவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.

 

#reeshma