கட்சிக்கு கெட்ட நேரத்தை கணித்த ஜோதிடர்: கடுப்பில் விஜயகாந்த்

ஜாதக பலன்கள் சரியில்லாத காரணத்தால் தான் கட்சி பின்தங்கி இருக்கிறது என ஜோதிடர் கூறியுள்ளதால் ராசியில்லாத நிர்வாகிகளின் பதவியை பறிக்க விஜயகாந்த் முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேமுதிக தலைவர் விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதாவும் ஜோதிடம் மீது அதிக நம்பிக்கை கொண்டவர்கள். கட்சி கூட்டமாக இருந்தாலும், வெளியூர் சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் ஜோதிடர் என்ன கூறுகிறாரோ அதனையே பின்பற்றுவார்கள்.

இந்நிலையில், கட்சியின் முக்கிய பதவிகளில் உள்ள ராசியில்லாத நபர்களால் தான், கட்சிக்கு பெரும் பின்னடைவு என ஜோதிடர் கூறியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட நிர்வாகிகளால் கட்சிக்கு கெட்ட நேரம் என முடிவெடுத்துள்ள விஜயகாந்த், அவர்களை மாற்ற முடிவெடுத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.