பாராளுமன்றத்தினை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதியுடன் முடிந்தளவு அவசரமாக கலந்துரையாடி நாட்டில் நிலவும் அரசியல் நிலைமைக்கு தீர்வொன்றினை பெற்றுக் கொடுக்க தன்னால் இயன்றளவு முயற்சிப்பதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று(30) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரியப்படுத்தியதாக சபாநாயகர் அலுவலகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அறிவித்துள்ளது.
பாராளுமன்றத்தினை பிற்போட்டு பெரும்பான்மையினை நிரூபிப்பதனை தடுப்பதானது ஜனநாயகத்தினை மீறும் செயலாகும் எனவும், பாராளுமன்றத்தினை உடனடியாக கூட்டுமாறும் ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தமிழ் அரசுக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை பிரதிநித்துவப்படுத்துவோர் இதன்போது சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
