(FASTNEWS|COLOMBO) – இந்திய மக்களவை தேர்தலில் தோல்வியடைந்தமையால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி இராஜினாமா செய்துள்ளார்.
தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை பொறுப்பேற்றுக்கொண்ட ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
எனினும், இந்த இராஜினாமாவை செயற்குழு ஏற்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.