கட்டார் நாட்டவர்களை இலங்கைக்கு பயணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தல்..

கட்டார் நாட்டவர்களை இலங்கைக்கு பயணிக்க வேண்டாம் என்று அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சு எச்சரித்து அறிவுறுத்தியுள்ளது.

கட்டார் வெளிவிவகார அமைச்சின் ஊடக அறிக்கை ஒன்றை மேற்கோள்காட்டி, அந்த நாட்டின் ஊடகம் ஒன்று இந்தச் செய்தியினை தெரிவித்துள்ளது.

இலங்கையில் சில பகுதிகளில் வேகமாகப் பரவும் பன்றிக் காய்ச்சல் எனப்படும் AH1N1 வைரஸ் தொற்று டெங்கு உள்ளிட்ட நோய்ப்பரவல் நிலை ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே கட்டார் அரசு இந்த அறிவுறுத்தலை விடுத்திருக்கிறது.

 

(rizmira)