கட்டுநாயக்கவில் 2 ஆடைத் தொழிற்சாலைகளுக்கு பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் தொடர்ச்சியாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றமை மற்றும் தொழிலாளர்கள் அதிக அளவில் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொள்வதால் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கம்பாஹா மாவட்டத்தில் இதுவரை கொரானாவினால் பதிக்கப்பட்டவர்களின் தொகை 1,483 ஆக அதிகரித்துள்ளது.