கட்டுநாயக்க விமான நிலையத்தில் செயற்படும் அரசாங்க திணைக்கள அலுவலகம் ஒன்றில் பெண்களை ஆபாசமாக ஒளிப்பதிவு செய்த காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்குள் இருக்கும் தொலைபேசி நிறுவனம் ஒன்றின் கிளையில் பணி புரியும் குறித்த ஊழியர் தனது காலில் செல்போனை வைத்து மிகவும் சூட்சுமான முறையில் அதில் உள்ள கெமரா மூலம் அங்கு வந்த பெண்களை இரகசியமாக படம் பிடித்துள்ளார்.
அரச நிறுவனம் ஒன்றுக்குள் இருக்கும் நிறுவனம் ஒன்றில் இவ்வாறான நடவடிக்கைகளை தேடி அறிந்து அவற்றை தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த காணொளி;