கட்டுநாயக்க விமான நிலையத்தின் நடவடிக்கைகள் நாளை(06) முதல் வழமைக்கு..

கட்டுநாயக்க விமான நிலையத்தின் நடவடிக்கைகள் நாளை(06) முதல் வழமை நிலைக்குத் திரும்பும் என போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் பிரதியமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

விமான ஓடுபாதையில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புப் பணிகள் காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் விமான நிலையத்தின் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)