(FASTNEWS|COLOMBO) – ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் புனரமைக்கப்பட்ட நீர்கொழும்பு கட்டுவாபிட்டி தேவாலயம் எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதி மீண்டும் திறந்து வைக்கப்படவுள்ளதாக கொழும்பு பிரதி ஆயர் வண. கலாநிதி ஜே.டி. அந்தோனி ஜயகொடி தெரிவித்துள்ளார்.
பொரளையில் நேற்று(17) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக விசேட ஆராதனைகள் நடத்தப்படுமெனவும், தேவாலயம் மீளவும் திறந்து வைக்கப்பட்ட பின்னர், மக்களுக்கான நிவாரணத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படுமெனவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.