கண்களை அழகாக்க உங்கள் வீட்டிலுள்ள பொருட்களே போதும்…

ஆண் பெண் என இருபாலரும் தற்போது தங்களை அழகாக காட்டிக் கொள்ள வேண்டும் என்று துவங்கி விட்டார்கள். இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால் கண்ணுக்கு கீழே கருவளை வருவது சகஜமாகிவிட்டது.

ஹார்மோன் மாற்றம், தூக்கமின்மை,ஸ்ட்ரஸ்,உணவுப்பழக்கம் மாற்றம் போன்றவற்றால் கருவளையம் ஏற்படுகிறது.
இதனை தவிர்க்க வீட்டிலேயே இருக்ககூடிய பொருட்களைக் கொண்டு சிறந்த தீர்வினைக் காண முடியும்.

தக்காளி :
தக்காளி கருவளையத்தை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு ஸ்பூன் தக்காளிச் சாறுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கண்களைச் சுற்றி பூசி வர கருவளையம் மறைந்திடும். அதேசமயம் சருமமும் மிருதுவாக இருக்கும். கண்களைச் சுற்றி தடவி 10 நிமிடம் கழித்து கழுவி விடலாம். இதனை தினமும் செய்தி வரலாம்.

உருளைக்கிழங்கு :
உருளைக்கிழங்கினை அரைத்து சாறு எடுத்து அதனை ஒரு பஞ்சில் ஒற்றியெடுத்து கண்களைச் சுற்றி துடைத்து எடுக்க வேண்டும். அல்லது வட்டமாக உருளைக்கிழங்கை நறுக்கி அதனை கண்களுக்கு மேலே வைத்திருந்தாலும் போதுமானது. இதற்கு சமைக்காத உருளைக்கிழங்கை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

டீ பேக் :
பயன்படுத்திய டீ பேக் கூட இதற்கு பயன்படுத்தலாம். டீ பேகை குளிர்சாதன பெட்டியில் வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை கண்களின் மேல் 15 நிமிடம் வரை வைத்திருக்க வேண்டும். அமைதியாக கண்களை மூடியிருக்க வேண்டும். இதனை நீங்கள் தினமும் கூட செய்யலாம்.
கவனம்: கண்களில் டீ பேகை வைத்திருக்கும் போது கண்களை திறப்பது, கூடாது.

வெள்ளரி :
வெள்ளரியை வட்டமாக நறுக்கி அரை மணி நேரம் ப்ரீசரில் [freezer]வைத்திடுங்கள். பின்னர் அதனை எடுத்து கொஞ்சம் குளிர்த்தன்மை குறைந்ததும் அதனை கண்களுக்குள் வைத்திருக்க வேண்டும். இதனால் கண்கள் சோர்ந்து போயிருந்தால் ஃபிரஷ்ஷாக தெரியும்.