இறைச்சி மற்றும் மதுபான நிலையங்களை மூடுவதற்கு தீர்மானம்…

கண்டி எசல பெரஹெர உற்சவ விழாவின் காரணமாக, கண்டி நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில், இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் மதுபான நிலையங்களை மூடுவதற்குத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பெரஹெர ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

கண்டி எசல பெஹெர உற்சவத்தையொட்டி, இறைச்சி, மீன் விற்பனை நிலையங்கள் மற்றும் மதுபான நிலையங்கள் அனைத்தும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.