கண்டி கலவரங்களில் சேதமடைந்த வணக்கஸ்தலங்களை புனரமைத்து பேணிப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
புனரமைப்பு பணிகளுக்காக 19 இலட்சம் ரூபா நிதி வழங்கப்படும் எனவும், இதுதொடர்பான நிகழ்வு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் .பத்தரமுல்ல ‘அபே-கம’ வளாகத்தில் இன்று(06) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பகின்றது.
அமைச்சரின் எண்ணக்கருவில் உருவான சசுனோதய வேலைத்திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன. இதற்கு மத்திய கலாசார நிதியம் நிதி வழங்கி தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக் கொடுக்கிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.