(FASTNEWS | COLOMBO) – கண்டி தலதா மாளிகை மற்றும் அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி ஆகியவற்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாளை(18) முதல் ஆரம்பமாகும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இந்த முக்கியமான பௌத்த வழிபாட்டு தலங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் காணப்படும் நிலைமையை கவனத்தில் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை தவிர நாடு முழுவதும் உள்ள விகாரைகளுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.