கண்டி – திகன பகுதியில் இடம்பெறும் விரும்பத்தகாத சில சம்பவங்கள் தொடர்பில் அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு சட்டத்தினை அமுல்படுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தெரிவித்துள்ளார்.

“கண்டி – திகன பகுதியில் இடம்பெறும் வன்முறைகளை கட்டுப்படுத்துவதில் பொலிஸாரிடமும் சில குறைபாடுகளை காணமுடிகிறது. இந்நிலைமை ஆரோக்கியமானதல்ல. யாராக இருப்பினும் தமக்குள்ள பொறுப்பினை உணர்ந்து இவ்வாறான சம்பவங்களின் போது நடந்து கொள்ள வேண்டும்..” என நேற்று(05) தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
#rishma