திகன சம்பவத்தில் கைதான உறுப்பினர் விளக்கமறியலில்.. (Update)

திகன வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இம்முறை பொதுஜன முன்னணியின் கீழ் போட்டியிட்டு தெரிவாகிய பிரதேச சபை உறுப்பினர் சமந்த பெரேரா’வை எதிர்வரும் ஏப்ரல் 02ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க இன்று(29) தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

++++++++++++++(update)

கண்டி வன்முறைச் சம்பவம் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது…

கண்டி – திகன பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் குண்டசாலை பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் நேற்று(28) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

 

 

-Rishma