(FASTNEWS|COLOMBO) இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து தனியார் கத்தோலிக்க பாடசாலைகளையும் மீள அறிவிக்கும் வரையில் ஆரம்பிக்க வேண்டாம் என கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலைக் கருதி இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து சகல கத்தோலிக்க தனியார் பாடசாலைகளுக்கும் அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.