கனடாவின் டோரண்டோ மாகாணத்தில் உள்ள இந்திய உணவகத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
படுகாயமடைந்தவர்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இச்சம்வம் தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில் இரண்டு மர்ம நபர்கள் உணவகத்திற்குள் வந்து சென்றது தெரியவந்துள்ளது. அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.