கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரிப்பு…

கனடாவில் கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் கடும் வெப்ப நிலை நீடித்து வருகிறது. இதனால் நாட்டின் மேற்குக் கடலோரப் பகுதி முழுவதும் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது.

மாண்ட்ரியல் நகரில் மட்டும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் சில தினங்களில் இயல்பு நிலை திரும்பி விடும் என கனட நாட்டு சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க நீச்சல் குளங்களை நீண்ட நேரம் திறந்து வைக்கும்படி என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.