கனேமுல்ல – கடவத்தை வீதியின் 123ம் இலக்க தனியார் பேரூந்து பணியாளர்கள் இன்று(25) காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிவேக வீதியில் பயணிக்கும் நீர்கொழும்பு – கடவத்தை மார்க்கத்திலான பேரூந்துகள் குறிப்பிட்ட பேரூந்து தரிப்பிடங்களில் அல்லாமல் ஏனைய அனைத்து தரிப்பிடங்களிலும் நிறுத்தப்படுவதற்கு எதிராகவே இவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.