கம்பஹாவிற்கு இன்று நீர் வெட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கம்பஹா ) – கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை 9.00 மணி முதல் ஆறு மணிநேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி பேலியாகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க மற்றும் சீதுவ, களனி, பியகம, மஹர மற்றும் தொம்பே ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நீர் விநியோகம் தடைசெய்யப்படவுள்ளது.

சப்புகஸ்கந்த உப மின் கட்டத்தின் பழுது காரணமாக இந்த நீர் விநியோகம் தடைசெய்யப்படவுள்ளது.