தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த கருணாநிதி கடந்த மாதம் காலமானார். தமிழ் சினிமாவில் அவர் ஆற்றிய பணி முக்கியமானது. கலைத்துறையையும் அவர் மிகவும் ரசித்தார் என்பதை அவரது படைப்புகள் சொல்லும்.
அந்த வகையில் அவரின் வாழ்கையை யாராவது படமாக்கினால் அதில் நான் கருணாநிதியாக நடிக்க வேண்டும் என கூறியுள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ். மேலும் அவர் பேசும் போது கலைஞருக்கு நிகர் அவர் தான்.
அவர் போல இனி ஒரு தலைவர் உருவாகப்போவதில்லை. அவருடைய வாழ்க்கையை நான் வாழ முடியாது. ஆனால் அவர் வேடத்தில் நான் நடிக்க வேண்டும் என ஆசையாக இருக்கிறது.
வாய்ப்பு கிடைத்தால் எனக்கு அது வரப்பிரசாதம் என கூறினார்.