கருணா சற்றுமுன்னர் CID இல் ஆஜர் 

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இருந்த காலகட்டத்தில் ஆனையிறவு பகுதியில் ஒரே இரவில் தாம் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரையிலான இராணுவ வீரர்களை கொன்றொழித்துள்ளதாக கருணா அம்மான் சமீபத்தில் சர்ச்சைமிக்க கருத்தினை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.