கர்ப்பிணிப் பெண் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த மற்றுமொரு சந்தேக நபர் கைது

பொரல்லை வெலிக்கடை சிறைச்சாலை பிரதேசத்தில் .வைத்து கடந்து சில வாரங்களுக்கு முன் கர்ப்பிணிப் பெண் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

42 வயதான குறித்த சந்தேக நபரை மாத்தறை சிறைச்சாலை சுற்றுவட்ட பாதையில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேக நபர் மாத்தறை,நாவிமன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் குறித்த நபரிடமிருந்து 9 மில்லி மீற்றர்  வகை துப்பாக்கியுடன் 10 ரவைகளையும் பொலிஸார் மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.