கர்ப்பிணி ஆசிரியைகளுக்கான உடையில் மாற்றம் வருகிறது..

பாடசாலை கற்பிக்கச் செல்லும் கர்ப்பிணி ஆசிரியைகள் தளர்வான, தமக்குச் சௌகர்யமான ஆடைகள் அணிவது குறித்து  கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கவனம் செலுத்தியுள்ளார்.

சேலைகள் கர்ப்பிணிகளான பின்பும்  ஆசிரியைகள் அணிவது மிக அவசியமென்று அமைச்சர்  குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு சௌகர்யமான ஆடைகளை அணிவது தாய்க்கும் பிள்ளைக்கும் நன்மை பயக்கும் என்று அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

கல்வி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் இது பற்றிக் குறிப்பிடுகையில் கர்ப்பிணி ஆசிரியர்களுக்கு பொருத்தமான ஆடைகள் தேர்வு பற்றி நடவடிக்கைகள் எடுக்கும்படி அதிகாரிகளைப் பணித்திருப்பதாகக் கூறியுள்ளார்.