கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சுதந்திர தினமன்று விடுதலை கோரிக்கை…

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04ம் திகதியான சுதந்திர தினமன்று பொது மன்னிப்பு வழங்குமாறு பெவிதிஹன்ட அமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக, குறித்த அமைப்பின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் இன்று(10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.