கலந்துரையாடலுக்கு பிரதமரால் சந்தர்ப்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளியை அதிகரிக்கும் விடயம் தொடர்பில், பாடசாலைகளைப் பாதுகாப்பதற்கான மக்கள் இயக்கத்திற்கு, எதிர்வரும் சில தினங்களில் கலந்துரையாடல் ஒன்றுக்கான சந்தர்ப்பத்தை, வழங்க பிரதமர் அலுவலகம் தீர்மானித்துள்ளது.

தம்மால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாடசாலைகளைப் பாதுகாப்பதற்கான மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.