´கலுமல்லி´ 7 நாட்களுக்கு தடுப்பு காவலில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கைது செய்யப்பட்ட ´கலுமல்லி´ என அழைக்கப்படும் ரொஹான் பிரதீப்பை எதிர்வரும் 7 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொஸ்கொட தாரகவின் நெருங்கிய உறவினரான ´கலுமல்லி´ என அழைக்கப்படும் ரொஹான் பிரதீப் அங்கொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.