கல்கிஸ்ஸை புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று(06) இரவு 08.45 மணியளவில் தண்டவாளத்தில் தலைவைத்து யாழ்ப்பாணத்தில் இருந்து கல்கிஸ்ஸை நோக்கி பயணித்த புகையிரதத்தின் முன்னால் நபரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர் வேரஹெர பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான நபரொருவர் என தெரிய வந்துள்ளது.
சடலம் தற்போது களுபோவில மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோனை இன்று(07) இடம்பெறவுள்ளது.
(rizmira)