கல்வியியல் கல்லூரிக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பம்…

2015ஆம் ஆண்டில் உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கல்வியியல் கல்லூரிக்கு இணைத்துக்கொள்ளும் பணி நேற்று(05) ஆரம்பமானது.

களுத்துறை பஸ்துன்ரட்ட தேசிய கல்வியியல் கல்லூரிக்கு நேற்று மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி நடவடிக்கைகளை முறையாக முன்னெடுப்பதற்காக இந்த பணி மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

கடந்த வருடத்தில் களுத்துறை கல்வியியல் கல்லூரிக்கு 279 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர். இவ்வருடத்தில் இத்தொகை 310 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.