கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற 3500 ரூபா கொடுப்பனவு தொகையை 5 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
நேற்று(26) அமைச்சில் இடம்பெற்ற தேசிய கணித, விஞ்ஞான ஒலிம்பியாட் கனிஷ்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வில் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.