களுத்துறை சிறைச்சாலைப்பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
கதிர்காமத்தில் வைத்தே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 7 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.