களுத்துறை மாவட்டத்தில் இன்று(22) காலை 8.30 மணி முதல் 7 மணி வரையான 10 1/2 மணிநேர நீர் வெட்டு இடம்பெறும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதற்கிணங்க வாதுவ, வஸ்கடுவ, பொதுப்பிடிய மொரன்துடுவ, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு, கட்டுகுருந்த, நாகொட, பயாகல, பிலிம்நாவத்த, போம்புவல, மக்கொன, பேருவளை, களுவாதோர, மொரகல்ல, அளுத்கமை, தர்கா நகர் மற்றும் பெந்தோட்டை ஆகிய பகுதிகளிலேயே நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.