கழிவுப் பொருட்களினால் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயற்திட்டம் விரைவில்..

கழிவுப் பொருட்களினால் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயற்திட்டத்தை இன்னும் 03 வருடங்களுக்குள் ஆரம்பிக்கப் போவதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பிலியந்தல – கரதியான மற்றும் தொம்பே ஆகிய பிரதேசங்களுக்கு குப்பை அகற்கும் பணி தற்காலிகமான ஒன்று எனவும் முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(rizmira)