(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நடிகை இலியானா தான் தினமும் 12 மாத்திரைகள் சாப்பிட்டதற்கான காரணத்தை சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
இலியானா கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஆண்ட்ரூவை தீவிரமாக காதலித்து வந்தார். இலியானாவுக்கும் அவரது காதலருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்துவிட்டனர்.
காதல் முறிந்ததை அடுத்து அவர் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருந்தார். தன் காதலரை விட்டு பிரிந்ததால் இலியானா மிகவும் மன அழுத்தத்துக்கு உள்ளானதாகவும், அதிலிருந்து மீண்டது குறித்து அவர் கூறியதாவது:-
வாரந்தோறும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று வருவதால் படங்களில் நடிப்பதை கூட ஒத்தி வைத்திருக்கிறேன்.
மன அழுத்தத்தால் சில சமயங்களில் ஒரு நாளைக்கு 12 மாத்திரைகள் சாப்பிட்டு வந்தேன். அதனால் உடல் எடையும் அதிகமாக கூடி விட்டது. உடல் எடையை குறைப்பதற்காக ஜிம்முக்கு சென்று விட்டு வெளியே வரும்போது அந்த புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் பலர் பதிவிடுகிறார்கள். இதனாலேயே நான் ஜிம்முக்கு செல்வதையும் தவிர்த்து வருகிறேன் என கூறியுள்ளார்.