காத்தான்குடி, பாலமுனை புடவைகள் வடிவமைப்பு நிலையம் மாகாண அமைச்சிடம் கையளிப்பு…

(FASTNEWS|COLOMBO) வர்த்தக மற்றும் வணிக அமைச்சின் கீழான புடவை வடிவமைப்பு, சாயமிடுதல் மற்றும் சேவைகள் நிலையத்தை கிழக்கு மாகாண சபைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று(29) காலை காத்தான்குடி, பாலமுனையில் நடைபெற்றது.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்விடம் இந்த நிலையத்தை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், அமைச்சரின் மேலதிக செயலாளர் தாஜுதீன், கிழக்கு மாகாண மேலதிக செயலாளர் அஸீஸ், மக்கள் காங்கிரஸின் செயலாளர் சுபைதீன், புடவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் ரொபட் பீரிஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Image may contain: 5 people, people smiling, people standing and closeup

Image may contain: 8 people, people smiling, people standing

Image may contain: 5 people, people sitting

Image may contain: 20 people, people smiling