காத்திருப்புப் பட்டியலில் உள்ள பிள்ளைகளுக்கு பாடசாலைகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை…

காத்திருப்புப் பட்டியலில் உள்ள பிள்ளைகளுக்கு எதிர்காலத்தில் பாடசாலைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக மேல் மாகாண கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

பாதுகாப்புப் பிரிவினரது பிள்ளைகளுக்கு வகுப்பறையொன்றுக்கு 05 பேர் என்ற வீதத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வியமைச்சின் செயலாளர் விஜய அமரபந்து தெரிவித்துள்ளார்.

இவர்களில் அதிகமானோர் சமூகமளிப்பதில்லை எனவும் அதன்போது ஏற்படும் வெற்றிடங்களை கருத்திற்கொண்டு காத்திருக்கும் பட்டியலில் உள்ள பிள்ளைகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

2018 ஆம் கல்வியாண்டிற்கான பாடசாலைகளில் முதலாம் தரத்திற்காக மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் நேற்று(15) ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.